Saturday, February 13, 2016

எப்பா தம்பி, நீ திருந்தவே மாட்டியா...

காலம் காலமா நீங்களும் இதே கேள்விய தான் என்ன பார்த்து கேட்குறீங்க, ஏன் நானுமே கூட இத தான் கேட்கிறேன் என்னை பார்த்து. சரி அத விடுங்க, இப்போ மேட்டர்க்கு வருவோம். என்னதாண்ட உன் பிரச்சனை அப்டின்னு நீங்க கடுப்பா ஆரம்பிக்குறதுக்குள்ள நானே சொல்லிடறேன்.
இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்(அதுக்கு என்னடா இப்போ)..

ஒழுங்கா நேரத்துலையே எழுந்து கோவில்களுக்கு போயிட்டு,அர்ச்சனை பண்ணிட்டு வா அப்டின்னு மேலிடத்திலிருந்து கட்டளை வந்து சேர, கொஞ்ச நேரம் யோசிச்சேன், நமக்கு எதுடா கோவில்னு.. டக்குனு தோனுச்சு நம்மலுடைய கோவில்களே ஐடி கம்பனிகள் தானே, இப்போதைக்கு.அதில் அர்ச்சனை என்பது நேர்முகத்தேர்வுகள் தானே என்று தோன்ற.. அடுத்த சில மணித்துளிகளில் கிளம்பிவிட்டேன் சர்டிபிகேட் பைல தூக்கிகிட்டு .அட ஆமாங்க நேர்முகத்தேர்வுக்கு தான். அங்க போயி நின்னா உள்ள கூப்பிட்டாங்க..
எப்பா தம்பி உனக்கு வேற வேலையே இல்லையா, இப்போ தான ஒரு கம்பெனில சேர்ந்த,அப்புறம் எதுக்கு இது அப்டின்னு தோன்றினாலும், வேலை தேடுற காலத்துல என்னை தொரத்தி அடிச்ச கம்பெனி இது, இப்போ போயி பாப்போம் ஜெயிக்க முடியுதானு என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டு உள்ள போனேன்.

கேட்ட கேள்விக்கெல்லாம் கடகடன்னு பதில் சொல்ல, திடீர்னு ஒரு கேள்விக்கு நான் சொன்ன பதில் தப்புன்னு அந்தம்மா சொல்ல, இல்ல சரின்னு நான் சொல்ல. சிஸ்டம் எடுத்துவாங்க ரன் பண்ணி காட்டுகிறேன் அப்டின்னு நான் சொல்ல. அந்தம்மா கடுப்பாகி ஏதோ ஏதோ சம்பந்தம் இல்லா கேள்வி கேட்டு கழுவி கழுவி ஊத்துனாங்க. விடுவனா மாமன் அப்டிங்கற கதையா நானும் சமாளிக்க.கடைசியில் நேர்முகத்தேர்வு முடிஞ்சுருச்சுனு அவுங்க சொல்ல, சரி கிளம்பறேன்னு நான் சொல்ல காத்திருக்க்கவும்னு சொன்னாங்க..எம்மா ஒன்றை மணிநேரமா உள்ள வைச்சு என்னை கும்மி எடுத்தது பத்தாத...

என்னடா இது, எதுக்கு வெயிட் பண்ண சொல்றாங்க அடிக்க ஆள் கூட்டிவருவான்களோ, ஒரு 75 பெர்சென்ட் தான ஒழுங்கா attend பண்ணினோம் , நம்ம ஏதும் ஒரு flow ல திட்டி இருப்போமோ, இருந்தாலும் இருக்கும் கிளம்பிடுவோம்னு எழுந்தரிக்க, அந்தம்மா வந்து நீங்க செலக்ட் அப்டின்னு சொல்லிட்டு,HR round க்கு அனுப்ப, HR ரவுண்டு போனா,ஓகே நீங்க கேட்டத தரோம்னு சொல்ல நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன் அப்டின்னு வடிவேல் சொல்ற கதையா நானும் ஷாக் ஆகிட்டேன்..

ஒரே குழப்பத்துலையே வீடு வந்து சேர்ந்தேன் எப்படி செலக்ட் ஆனோம், நம்ம தான் அடிக்காத குறையா சண்டை போட்டோமே, நம்ம answer சரியாவே இருந்தாலும் அந்த அளவுக்கு வாக்கவாதம் பண்ணி இருக்க கூடாது அப்புறம் எப்படி அப்புறம் எப்படின்னு கேள்வி என்ன துளைத்து எடுக்க, மெதுவாய் system on பண்ணி பார்த்த அத்தனை wishes என் பிறந்த நாளுக்கு அத்தனை நல் உள்ளங்களிலிருந்து.. அப்புறம் என்ன நிம்மதியா படுத்துட்டேன், தூங்க போறேன்..
அட அதான் எனக்குள்ள துளைத்துகொண்டே இருந்த கேள்விக்கு தான் பதில் கிடைச்சுருச்சே நான் எப்படி select ஆனேன் அப்டிங்கற கேள்விக்கு... அட இன்னுமாங்க புரியல என்ன காரணம் அப்டின்னு... ஆமாங்க அதே தான் நீங்க தான், நீங்களே தான்..

எனது பிறந்த நாளில் என்னை வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனதார நன்றி...

0 comments:

Post a Comment