Wednesday, December 11, 2013

நீ எனக்கு குழந்தை தான் என்பதை மறந்துவிடாதே ....




நேற்றைய தொலைபேசி உரையாடலில்,ஊடு கதிர்ப்படம்(Scan)மூலம் என் குழந்தையின் அசைவை கண்டதாய் உன்னிடம் பகிர்கிறேன். தலை,கை, கால், விரல்கள் அசைவை பற்றி சொல்லிகொண்டே போகிறேன் பெருமையாய், எதுவும் பேசாமல் சிரித்துகொண்டே இருந்துவிட்டு கடைசியில் கேட்கிறாய். கோமதி சொல்லிச்சு நல்லா சாப்பிட மாட்டீங்கற அப்டின்னு .சாப்பிடாமா எலும்பா கடக்காதட நாயீ, அடுத்த தடவை ஊருக்கு வரும்போது பாப்பேன்,அப்டியே வந்த தோஷ திலுப்பில காலு கால சூடு வைச்சிருவேன் பாத்துக்க...

அழகாய் சொல்லிவிட்டாய் உனக்கு குழந்தை பிறந்தாலும் நீ எனக்கு குழந்தை தான் என்பதை மறந்துவிடாதே என்று..

0 comments:

Post a Comment