Thursday, December 12, 2013

அலைபேசி நிழற்படத்தில் - ஏங்கும் நம் நினைவுகளை ...






ஏறக்குறைய என் எழுத்தை தடுத்தே நிறுத்திவிட்டாய், உன்னை பற்றியே உயிர் உருகும் நிலை, உன் அசைவுகளில் உச்சம் கண்டதாய் உணர்வு மேலிட-வெற்றிடமாய் நான், உன் ஒவ்வொரு நகர்வுகளும் என்னை பிரதிபலிப்பதாய்,அழகாய் சிரிக்கிறாய்,அழகாய் அழுகிறாய் - காண குரங்காய் தவ்வுகிறேன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் முடிவிலும், எதற்காகவோ சிரிக்கிறாய் - எனக்காய் சிரித்ததாய், எதற்காகவோ அழுகிறாய் -எனக்காய் அழுததாய்.

இரண்டு நாட்களும் இரண்டு நிமிடமானதை ஞாயிற்றுகிழமை முடிவின் பேருந்து பயணம் நினைவுபடுத்த - திங்கள்கிழமையில் பாவமாய் அலுவலகம் கிளம்புகிறேன் நீ இல்லா வெற்று வீட்டின் வாசற்படியில் வைத்து விட்டு செல்கிறேன் -நம் மகனை கையில் ஏந்தி நிற்கும் அலைபேசி நிழற்படத்தில் - ஏங்கும் நம் நினைவுகளை ...

0 comments:

Post a Comment