Tuesday, December 31, 2013

உங்க அழைப்பேசி ரிங் ஆகுற சத்தம் கேட்குது, அவங்கதான் - எச்சரிக்கை பாஸ்.


31-Dec-2012 அன்னைக்கு ஆறு மணிக்கு அலுவலகத்துல இருந்து கிளம்பினேன் வீட்டுக்கு, அவசர வேலை எதுவும் இல்லை என்ற போதும் ஏதோ இனம் தெரியா கொண்டாட்டம்,அடுத்த நாள் பிறக்கவிருக்கும் புத்தாண்டிற்க்காக இன்றே ஏதோ சந்தோசம் மனதில், இந்த புத்தாண்டை தவற விட்டு விட கூடாது, ஏதாவது ஒருவகையான சந்தோசத்தில் திளைத்தே ஆக வேண்டும் என்ற என் ஆழ்மனத்தின் எண்ணத்திற்கேற்ப, பேருந்தில் செல்லும் போதே நண்பன் ஒருவன் அழைத்தான் அழைப்பேசியில்.

அவன்: டேய், வரியா எங்க ரூமுக்கு, புத்தாண்டை விமர்சியாக கொண்டாட திட்டம் போட்டு இருக்கோம்,

நான்: இல்லடா,வீட்டுக்கு போகணும் நான் வருவேன்னு எதிர்பார்த்துகிட்டு இருப்பாங்க

அவன்:ஏன்டா காரணமா சொல்லதெரியாது உனக்கு.

நான் : சரிடா, நான் ஏதாவது சொல்லிட்டு வரேன்.

வீட்டுக்கு அலைபேசியில் அழைத்து அலுவலகத்தில் வேலை இருப்பதாகவும், வர நேரம் ஆகும் என கூறிவிட்டேன்.

அடுத்த பேருந்தை பிடித்து, நேராக நண்பனின் ரூம்க்கு போயி சேர்ந்தேன். குறைந்தது ஒரு பத்து நண்பர்கள் ஒன்று கூடி இருந்தார்கள். சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் வெட்கப்பட்ட நானும் ஆடத் தொடங்கினேன். நொடிகள் நிமிடங்கள் ஆகின, நிமிடங்கள் மணித்துளிகள் ஆகின,

அவன்: இந்த புத்தாண்டுக்கு என்னடா சபதம் எடுக்க போற, அதை கடை பிடிக்கபோற அடுத்த வருடத்திற்கு?

நான்: எதுவும் இல்லடா. நிமிட முள் பன்னிரெண்டை நெருங்கிகொண்டிருந்தன, அறைக்குள்ளே இருந்து ஒரு பெரிய பெட்டியை கொண்டு வந்து திறந்தனர், பாட்டில்களை பெட்டியில் இருந்து உருவினர்,

நான்: டேய் எப்ப இருந்துடா குடிச்சு பழகின (என்று நண்பனிடம்).

அவன் : அதெல்லாம் போன வருஷம் தாண்ட, அதை விடு, இந்தா பிடி.

நான்: ஐயோ வேண்டாம்ட, இந்த பழக்கம் இல்லடா,

அவன்: சும்மா ஒரு நாள் தானடா,இந்தா பிடி என்றான்.

நான் : வேண்டாம். வேண்டாம்.

அத்தனை பெரும் ஒற்றுமையாய் சும்மா அடிச்சு பாரு நண்பா, சகோதர என ஆளு ஆளுக்கு ஒரு அடைமொழியில் என்மீது கரிசனமாய். கையில் வாங்குவதற்கே தடுமாறிய மனது, வாங்கியதும் தாமதிக்காமல் குடிப்பதற்கு ஏதுவாய் நிமிட முள் பன்னிரெண்டை தொட்டது, புத்தாண்டு கோசம், நண்பர்கள் வேண்டுகோள், சினிமா பாட்டு, என அனைத்தும் தப்பு என்பது தப்பு இல்லை, தவற விட்டு விட்டதாய் பிறகு வருந்துவாய் என்பது போல் மாற்றியது.

குடித்தேன், குடித்தேன், வாந்தி எடுத்தேன், குடித்தேன், வாந்தி எடுத்தேன், இரவு முழுவதும் ஆட்டம் குடும்பத்தை நினையாமல், தப்புகள் அனைத்தும் நியாயம் ஆகின அன்று இரவு முழுவதும்.

தப்புகள் யாவும் தப்பாகவே தெரிந்தன. புத்தாண்டு பிறந்த அந்த அதிகாலை பொழுதில்..என்ன செய்ய தவறை உணர்ந்தவனாய் வீடு திரும்பினேன்.அனைத்து தவறிற்கும் என்னுள் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருடத்தை தொடங்கினேன்.

வருடத்தை தொடங்கிய எனக்கு தெரியாது அன்று செய்த தவறு இந்த முழு வருடமும் என்னுடன் பயணிக்கும் என்று.

ஆம், சிறிய சண்டை, வேலைப்பளு,தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள், கோபம், சந்தோசம், தோல்வி, வெற்றி என்ற அனைத்திற்கும் பாட்டிலை கையில் பிடித்தேன்,குடித்தேன்.என்னுள் ஒன்றானது, என்னை மாற்றியது. சின்னதாய் கோவித்து கொண்ட மனைவியை,சமாதானப்படுத்த தெரியாமல் பாட்டிலை பிடித்துகொண்டு,பாட்டில் தான் என் மனைவி நீ இல்லை என்பதுபோல் சண்டையிட்டேன்.

இப்பொழுது தனிமையில் இருக்கிறேன். கடந்த வருடத்தில் கடைபிடிக்க வேண்டிய சபதம் ஏதும் இல்லாத எனக்கு, இந்த ஆண்டு ஒன்று இருக்கிறது. இந்த நான்கு நாட்களும் என்னை மாற்ற முயற்சித்தன,ஏதோ உணர்ந்தவனாய் இன்று புத்தாண்டு சபதம் எடுக்கிறேன் இந்த புது வருடத்தில் குடிக்க போவதில்லை என..

இன்று 31-dec-2013...... இப்பொழுது அழைப்பேசி ஒலிக்கிறது,

அவன்: "டேய் ஒரு நிமிடம் அப்டியே lineலையே இருடா , conferenceபோடுறேன்."

ஒரு நிமிடத்திற்கு பிறகு.

அவன்: " டேய் , சுரேஷ், ராமகிருஷ்ண, சிவா,கார்த்தி, அன்பு, விஜய் ..எல்லோரும் வந்துடுங்கட, இன்னைக்கு ரூம்ல புத்தாண்டு கொண்டாடலாம். ... Drinks party யும் உண்டு, மறக்காம வந்திடுங்க..

நான்: எதுவும் பேசாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

விஜய்: டேய் நான் வருலடா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, கொஞ்சம் குடும்ப வேலை இருக்கு..அதுவும் Drinks partyலாம் வைக்கிறீங்க, அதனால அதுல எப்பவும் ஆர்வம் இல்லை எனக்கு,மன்னிக்கவும்...

நான்: (வெட்கி தலை குனிகிறேன், இதே காரணம் நமக்கு அன்னைக்கு கிடைக்காததுக்கு காரணம் ரெட்டை மன நிலை என்பது புரிந்தது, மெதுவாய் பேச ஆரம்பிக்குறேன்).எனக்கும் கொஞ்சம் வேலை இருக்குடா.

அவன்: என்னடா இப்டி சொல்ற, ரெண்டு கை குறையுதேடா, என்ன பண்ணறது..

சுரேஷ்: டேய் விடுடா, என் நண்பர்கள் ரெண்டு பேரு இருக்கானுக, அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்வோம்.

அழைப்பு துண்டிக்க பட்டது...

என்ன பாஸ் உங்க அழைப்பேசி ரிங் ஆகுற சத்தம் கேட்குது, அவங்கதான் எச்சரிக்கை பாஸ் ....

0 comments:

Post a Comment