Thursday, December 19, 2013

வாழ்க்கை(வலி)ன்னா என்ன? --ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காய் கலப்படமற்று (பாகம் - 8)



நன்றிங்க எட்டாம் பாகத்தை படிக்க வந்ததிற்கு,
சரிங்க, வீட்டுக்கு நடைய கட்டின எனக்கு அங்க என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்...

முதல் பாகம் இணைப்பு இங்கே : -
முதல் பாகம்

இரண்டாம் பாகம் இணைப்பு இங்கே : -
இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம் இணைப்பு இங்கே : -
மூன்றாம் பாகம்

நான்காம் பாகம் இணைப்பு இங்கே : -
நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஆறாம் பாகம்

ஏழாம் பாகம் இணைப்பு இங்கே : -
ஏழாம் பாகம்

சென்னை வீதிகளில் நடமாடி ஜெயித்திருக்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கு பின்னாடியும் நண்பர்கள் என்ற நங்கூரம் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என்பதில் துளியும் ஐயமில்லை எனக்கு. அப்படி சென்னை வீதிகளில் ஜெயிப்பதற்காய் சுற்றி திரிந்த எனக்கான நங்கூரங்கள் தான் எனது அறைத்தோழர்கள்.

பாரதி ஞானசேகர் ராஜசேகர் பிரகாஷ் ஸ்டாலின்ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் மிகைபட்டவர்கள். என் வாழ்க்கை நிமிர்ந்து நிற்க தனது ஒவ்வொரு கரங்களையும் நீட்டியவர்கள். அவர்களை பற்றி இங்கு பகிர்ந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாய் தெளிவாய் இருக்கிறேன்.

பாரதி , பெயருக்கு ஏற்றது போல் இவன் பாரதி தான். முதலில் தைரியம் பழகு என்று கற்றுக்கொடுத்தவன். தவறோ சரியோ இப்பொழுது இதை நீ செய்தே தீர வேண்டும், தாமதிக்காதே, உன்னால் முடியும் அனுபவம் உள்ளவன் போல் மாறவேண்டும், அதற்கான சான்றிதல்களை அப்புறம் தயார் செய்து கொள்ளலாம், முதலில் நேர்முகத்தேர்வுகளை தவறாமல் பயம் இல்லாமல் சந்தித்து பழகு என்று உரக்க கூறி கூறி என்னின் பயத்தை கொன்றவன் பாரதி .


எப்பொழுதெல்லாம் அவன் சொந்த ஊருக்கு செல்ல நேரிடுகிறதோ அப்பொழுதெல்லாம் ஐநூறு, ஆயிரம் ரூபாய் என்று எனது கைகளில் என்னிடம் கேட்காமல் திணிப்பவன்.செலவுக்கு வைச்சுக்க வேணும்னா மறக்காம கேளு என்பவன். ஏதாவது course போக விருப்பம் இருக்கா, இருக்குனா சொல்லு, நான் பணம் தருகிறேன் என்பான். அத்தனை அக்கறையை என் மீது கொட்டியவன் நான் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என..

ஞானசேகர்- நான் என்னுள் என்னவெல்லாம் நினைக்கிறேன், எங்கெல்லாம் பயப்படுகிறேன், என்னவெல்லாம் கேட்க, பேச தயங்குகிறேன் என்று நன்கு அறிந்தவன். அத்தனை அன்பாய் அருகில் அமர்ந்து தட்டிகொடுத்து இப்படி இருக்காத, இப்படி இரு என்றெல்லாம் என்னை வழிநடத்தி சென்றவன்.

செலவுக்கு பணம் வேண்டும் என்று கூச்சப்படும் என்னிடம் எதுவும் கேட்காமல் எத்தனை முறை எனது பணப்பையில் பணத்தை வைத்துவிட்டு நான் கண்விளிப்பதற்குள் அலுவலகம் கிளம்பி இருக்கிறான் என நன்கு அறிவேன்..

தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பாயும் அப்டின்னு ஒரு பழமொழி உண்டு, அது மாதிரி இவன் 16 அடி அப்டினா அவுங்க அப்பா 32 அடி பாயுவாறு பாசத்துல. இப்படி ஒரு அப்பா நமக்கும் இருந்தா நல்லா இருக்குமே அப்டின்னு பலமுறை நினைச்சு பார்த்து இருக்கேன். அழகா அழைப்பாரு ,விஜி எப்டி இருக்க, என்ன பண்ற, ஏன்டா வேலை கிடைக்காம வீட்டுக்கு கூட போக மாட்டேன் அப்டின்னு அடம் பிடிக்கிரியாமம், வா விஜி எங்க வீட்டுக்கு போலாம், பொங்கல் கொண்டாடிட்டு வரலாம் அப்டின்னு ஒரு அன்போட, அக்கறையோட, உரிமையோட அதட்டுகிற அன்பு உள்ளம் கொண்ட அப்பா.

வார இறுதியில் விலை உயர்ந்த உணவகங்களில் உண்ண செல்லும் போது, தயக்கத்தில் எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருப்பதாய் சொல்லி தப்பிக்க நினைக்கும் என்னை கரம் பிடித்து அழைத்து சென்று அமர்த்தி உண்ணவைத்து அழகு பார்ப்பவன் தான் ஞானசேகர்.

ராஜசேகர் - இவன் கொஞ்சம் கோவக்காரன், அதனால அவன் சொல்லி நான் கேட்குல அப்டினா அடிச்சேபுடுவான் அப்டின்னு பயந்து இருக்கிறேன் பல நேரங்களில், என்ன வேணும்னு கேளுட இப்டியே இருக்காத அப்டின்னு சொல்லும்போது, எதுவும் வேண்டாம்ட அப்டினா, அடிவாங்க போற இந்த இத வாங்கிக்க, அத வாங்கிக்க அப்டின்னு பாசத்தை கொஞ்சம் முரட்டுதனாமாவே காட்டுற ஒரு நல்ல தோழன், இந்தா இந்த 500 ரூபாயா வைச்சுக்க பத்துலனா கேளு, அப்டியே இருக்காத அப்டின்னு அடிச்சே தன் அக்கறைய பதிவு செய்வான், resume அனுப்பி வை என் மின்னஞ்சல்க்கு, தேவைப்படுற புத்தங்கங்களை அனுப்பி வை அப்டின்னு சொல்லி, அத்தனையும் அலுவலகத்தில் நகல் எடுத்து வந்து இந்தா படி, நேர்முகத்தேர்வுக்கு போகும் போது பயன்படுத்திக்க அப்டின்னு பிரம்மிக்க வைப்பான் உதவி செய்து.

பிரகாஷ் - வெள்ளை உள்ளம், பிள்ளை குணம் அப்டின்னு சொல்வாங்களே அந்த மாதிரி ஒரு மனிதர் அப்டினா இவர சொல்லலாம். இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்ல, இவர் என் கல்லூரி தோழர் இல்லை என்பதால கொஞ்சம் பேச கூச்சப்பட்டேன் ஆரம்பத்துல, ஆனா பிரகாஷ் நல்லா பேசுவாரு, என்னைவிட வயதில் மூத்தவர் அப்டினாலும் வாங்க போங்க அப்டின்னு எனக்கு மரியாதை கொடுத்து அசத்தியவர் கடைசிவரை.. எதோ அவசரத்துக்கு அவரிடம் காச வாங்கிட்டு , திருப்பி கொடுக்கறப்ப கோபபட்டாருங்க பாருங்க, பாஸ் சும்மா இருங்க, திருப்பி கொடுக்கிறதா எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.இப்போ வேண்டாம் அப்டின்னு அதட்டி பாசத்தை காட்டியவாறு. அவ்வளவா ஆரம்பத்தில பழக்கம் இல்லாதபோது கூட ஒரு தோழமையோட உதவி பண்றத எப்படி சாதாரண ஒரு நிகழ்வா எடுத்துகிறது?. உண்மையில் மிகசிறந்த மனிதர் பிரகாஷ்.

சோர்ந்து போறப்ப தன்னம்பிக்கை கொடுக்குற மாதிரி இருக்கும் அவரோட வாழ்க்கை பயணம், அவர் கடந்து வந்த பாதைய சொல்லி நமக்கு ஒரு energy கொடுப்பாரு. வாழ்க்கைய நினைச்சு கவலைப்பட்டு அமர்ந்து இருக்குறப்ப வாங்க ஒரு board போடலாம் அப்டின்னு என்னை திசைதிருப்பி carromல என் கவனத்த கொண்டு போவாரு.

ஸ்டாலின் - வெற்றி, வாழ்க்கை, செயல், எண்ணம் இப்படி எவ்வளவு நிகழ்வுகள் நம்மை சுற்றி திரிந்தாலும், பொழுதுபோக்கு என்பது நிச்சயம் நம்மை தொட்டுகொண்டாவது இருக்க வேண்டும் இல்லை என்றால் நொறுங்கி போய்விடுவோம் என்பது மிகசிறந்த உண்மை. அப்படி என்னுடன் அதிகம் பழகியவன் ஸ்டாலின், அண்ணா அண்ணா என்று மரியாதையோடு அழைப்பவன். வாங்க ஒரு சூப் சாப்பிட்டுவரலாம், வாங்க சும்மா ஒரு வாக் போயிட்டு வரலாம் அப்டின்னு ஒரே மாதிரியான வாழ்க்கையை மாற்றி கொஞ்சம் புதுமையாய் வாழ பழகிக்கொள்ள கற்றுகொடுத்தவன்..

மிகவும் பொறுப்பு நிறைந்தவன், இளம் வயதிலையே பொருப்புள்ளவனாய் இருந்துஇருக்கிறான் அவனது குடும்பத்திற்கு. நிறையா கற்றுக்கொண்டு இருக்கிறேன் ஸ்டாலினிடம்.

இத்தனை பேரும் தான் எனக்கு நங்கூரமாய் இருந்தார்கள் நான் தள்ளாடும்போது.

வெறும் வார்த்தைகளை போட்டு கூறிவிட்டு சொல்வதால் மட்டும் என் நன்றியை முழுதாய் உணர்த்திவிட முடியாது என்பது எனக்கு நன்றாய் தெரியும். வார்த்தைகளற்று நிற்கிறேன் முழுமையான நன்றியை உணர்த்திவிட, நன்றாய் தெரியும் என் வாழ்க்கை முழுவதும் தேடினாலும் வார்த்தைகள் கிடைக்க போவதில்லை, ஏனென்றால் உங்கள் உதவிகளை வார்த்தைகளில் அடைக்க முடியாது என..

என்ன நடக்கும் என்பதை அடுத்த பதிவில் காண்போம்...


                                                                                         
                                           

2 comments:

ஹேமா (HVL) said...

நல்ல நண்பர்கள் கிடைப்பது வரம். தொடருங்கள்...

விஜய் said...

@hema :ஆமாம் ஹேமா அவர்களே...நண்பர்கள் அமைவது மிக முக்கியமான ஒன்று தான், இப்பொழுது நாம் இருக்கும் நிலைமையை வைத்தே ஆறேழு வருடங்களுக்கு முன் அமைந்த நண்பர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை கணித்து விட முடியும். மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். நன்றி ..

Post a Comment