Friday, February 26, 2010
உன் வெட்கம் உணர்த்தியதை.....
உன் பார்வையால், நான் துலைத்ததைஎல்லாம், தேடிக்கொண்டு இருக்கும்பொழுது தான், உன் காதலையும் கண்டெடுத்தேன்.
உன் பார்வை விட்டுவைத்த மீதி காதலை உன் வெட்கம் உச்சரித்தது .
உன் வெட்கம் உச்சரித்த காதலின் மீதியை உன் கைவிரல்கலும், கால்விரல்கலும் வரைந்து காட்டின .
நிஜமாய் சொல்கிறேன் உன்னை தவிர வேறு யாரும் காதலை இவ்வளவு அழகாய் உணர்த்தியது இல்லை.
உன் காதல் உணர்த்தியதை இங்கே சமர்பித்திருக்கிறேன்,
ஆனால் இன்னும் முடியாமல் தவிக்கிறேன் உன் வெட்கம் உணர்த்தியதை...........
 
நிஜமாய் உனக்கு தெரியாதடி
பேசாமல் முத்தமிட
Monday, February 22, 2010
உன் ஸ்பரிசம்.....
நான் ஊருக்கு சென்றிருந்த நாட்களை எப்படி சமாளித்தாய் என்றாய்?,
நீ அருந்திய தேனிர் கோப்பை, நீ உண்ணும் தட்டு, நீ உடுத்திய ஆடை, நீ குளிக்கும் சோப்பு, நீ கட்டியணைத்து தூங்கிய தலையணை,இவை அணைத்தும் என்னுடையதாய் மாறின என்றேன்.
ஓடி வந்து கட்டியணைத்து கொண்டாய்.........
நீ எப்படி சமாளித்தாய் என்றேன்?,
வார்த்தை பேசாமல் அழுதாய், புரிந்தது எனக்கு.
இனி அழவிடமாட்டேன் உயிரே.........
--விஜி
சிரித்தே கொன்றாய் ......
இரவு முழுவதும்-
சுவரையே வெறித்து பார்த்த கண்கள்,
உன் செல்ல பெயரை உச்சரித்தே காய்ந்துபோன உதடுகள்,
நீ திட்டியனவாய் இருந்தாலும் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருந்த காதுகள்,
விநாடிகளை கணக்கிட்டு கொண்டிருந்த விரல்கள்,
புரண்டு படுத்தே தேய்ந்த தேகம்,
சண்டை இட்டது போல் வெட்கத்தால் பிரிந்தே இருந்த கால்விரல்கள்,
இருட்டிலும் பிரகாசிக்க முயற்சித்த முகம்,
எங்கு எங்கே ரசாயன மாற்றம் நடக்கிறது என்று தெரியாமல் தவித்த உடல்,
உடலெங்கும் ஓடி எதோ சொல்ல முயன்று தோற்று போன குருதி,
ஓடிய குருதியின் வெப்பம் தாங்காமல் வெடிக்க முயற்சித்த நரம்புகள்,
புடைக்கும் நரம்பிற்கு சமாதானம் கூறிய தோல்கள்,
எனது உடலில் உனது உளவாளியாய் வேலை பார்த்த உன் நினைவுகள்,
காற்றில் உன்னை தேடி இதயத்தோடு இணைக்க முயற்சித்த ஒவ்வொரு சுவாசமும்,
தனக்குள் உனக்கொரு இடத்தை கொடுத்து கனத்த இதயம்,
இவையனைத்தும் வெட்கத்தில் இறந்து பிறந்தன
என்னை திட்டிய பிறகு, நீ சிந்திவிட்டு போன காலை நேர பனித்துளி புன்னகையால்.........
--விஜி
உன் மௌனம்......
Subscribe to:
Posts (Atom)